ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள 'ஸ்பைடர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருடைய அப்பா நடிகர் கிருஷ்ணா, மனைவி நம்பரதா, மகன் கௌதம், மகள் சிதாரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ் பாபு, இயக்குனர்கள் என்னைப் பொறுத்தவரையில் கடவுளுக்கு சமமானவர்கள் என்றார்.
“ஒரு படத்தின் கதை எனக்குப் பிடித்துவிட்டால் அதில் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். இயக்குனர்கள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் எனக்கு மிகப் பெரிய வெற்றிகளைக் கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இயக்குனர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள்.
இயக்குனர் முருகதாஸ் இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, ரசிகர்கள் டெக்னிக்கல் விஷயங்களையும், திரைக்கதையையும் பார்த்து வியந்து போவார்கள் என்றார். டப்பிங் பேசும் போது நானும் மிகவும் வியந்து போனேன். இந்த அளவிற்கு மிகச் சரியாக ஒரு இரு மொழிப் படத்தை வேறு யாராலும் தர முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸைப் பார்த்தேன். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருக்கிறார். இந்திய அளவில் பெரிய இயக்குனர் எனப் பெயரெடுத்தாலும் அவர் மாறவில்லை.
வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத அளவிற்கு எனக்கு அற்புதமான ரசிகர்கள் அமைந்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக எனக்கு எந்த நிபந்தனையற்ற ஆதரவையும் அவர்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார் மகேஷ் பாபு.