ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மதுரை அருகே உள்ள மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். எனவே முதுமையில் வாடும் எங்களுக்கு அவர் மாதந்தோறும் பராமரிப்பு செலவு தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்கள் நடந்த இந்த வழக்கில் தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என்பதற்காக ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தனுசும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் மேலூர் தம்பதிகளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தாங்கள் தொடர்ந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவவை என்றும், அவற்றின் அடிப்படையில் தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.