ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர் தன்யா. நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் அதையடுத்து அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தார். இப்போது விஜயசேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்திருக்கிறார். முதல் இரண்டு படங்களும் கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்று கூறும் தன்யா, இந்த படத்திற்கு பிறகு நானும் முன்னணி நடிகையாகிவிடுவேன் என்கிறார்.
மேலும், இந்த கருப்பன் படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்திருப்பதே எனக்கு வெற்றிதான். இந்த கருப்பன் படம் மதுரை கதையில் உருவாகியிருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த பெயருக்கேற்ப ரொம்ப அன்பான பெண்ணாக நடித்துள்ளேன். அதோடு, இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலும் எனக்கு நானே டப்பிங் பேசிய நான் இந்த கருப்பன் படத்தில் பேசவில்லை.
காரணம், இந்த படம் பக்கா மதுரை மண்வாசனை கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் சென்னையில் பிறந்து வளர்ந்த என்னால் மதுரை தமிழை சரியாக பேச முடியவில்லை. அதனால் இந்த படத்தில் எனக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுதான் குரல் கொடுத்திருக்கிறார். அதேசமயம், இந்த படத்தில் முழு மதுரை பெண்ணாக மாறி நடித்துள்ளேன். அதனால் முதல் இரண்டு படங்களையும் விட இந்த படத்தில் நான் ரசிகர்களின் கவனத்துக்கு செல்வேன் என்கிறார் தன்யா.