ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்த படம் தில்லுக்குத் துட்டு. கடந்த ஆண்டு ஜூலையில் இந்த படம் வெளியானது. அதையடுத்து சர்வர்சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கனும் என பல படங்களில் கமிட்டாகி நடித்தார் சந்தானம். ஆனபோதும் தில்லுக்குத்துட்டு படத்திற்கு பிறகு ஓராண்டு முடிந்து விட்ட போதும் இன்னும் அதற்கடுத்த படத்தை அவரால் வெளியிட முடியவிலலை.
மேலும், சர்வர்சுந்தரம் படத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நினைத்தார். ஆனால் அஜீத்தின் விவேகம் வெளியாகயிருந்ததால் ஆகஸ்ட் கடைசி வாரத்திற்கு ரிலீஸ் தேதியை மாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் விவேகம் ஆகஸ்ட் 24ந்தேதிக்கு மாறியதால், இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிடுகிறார். அதையடுத்து இரண்டே மாதங்களில் சக்க போடு போடு ராஜா படத்தை வெளியிடுகிறாராம்.
மேலும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குத்துட்டு என மூன்று படங்களில் நாயகனாக நடித்து விட்ட சந்தானம், இந்த சர்வர்சுந்தரம் படத்தில் காமெடி ஹீரோ என்பதில் இருந்து விடுபட்டு ஆக்சன் கலந்த எமோசனல் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதோடு, இந்த படத்தில் கல்லுரி இளைஞர்களை தியேட்டர்களுக்கு இழுக்கும் முயற்சியாக, அவர்கள் மற்றவர்களை கலாய்க்க, பொண்ணுங்களை கிண்டல் செய்ய பயன் படுத்தும் வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறாராம். அதற்காக தனது கதை இலாகாவில் சில கல்லூரி மாணவர்களையும் உட்கார வைத்து அவர்கள் பேசிக்கொள்ளும் கலோக்கியலான வார்த்தைகளை படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளாராம் சந்தானம்.