ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார் அர்ஜூன். ஏற்கனவே பல படங்களை இயக்கி நடித்த அவர், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து சொல்லிவிடவா என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். என்னதான் தான் ஆக்சன் ஹீரோ என்றாலும், இந்த படத்தில் ஆக்சனை திணிக்காமல் காதல் கதையை படமாக்கியிருக்கிறார் அர்ஜூன். மேலும், அவர் தனது மகளை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு அர்ஜூனின் அபிமானிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தார்களாம்.
அப்போது அர்ஜூன் பதிலளிக்கையில், நான் இவ்வளவு பெரிய புகழடைந்திருப்பதற்கு முழு காரணம் சினிமா தான். சினிமாவில் தான் எல்லாம் சம்பாதித்தேன். சினிமா போட்ட சாப்பாடைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது என் தொழிலை நானே தவறாக நினைக்கக்கூடாது. அதோடு, என் மகளைப்போன்ற எத்தனையோ பெண்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், என் மகளை சினிமாவில் நடிகையாக்கியதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
சினிமா ரொம்ப பாதுகாப்பான தொழில் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் என் மகள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், விஷாலின் பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்தேன் என்று சினிமாவைப்பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் அர்ஜூன்.