ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி உள்ளார். ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, லிவிங்ஸ்டன், நாசர் நடித்துள்ளனர், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். "அடி வாடி திமிரா புலியோட்டும் முறமா..." என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யாவே தயாரித்துள்ளார்.
ஒரு ஆவணப்பட இயக்குனர் நடுத்தர வயதை தாண்டிய பெண்களின் பிரச்சினைகளை பேசுகிற ஒரு படம் தயாரிக்கிறார். இதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றுகிறார் என்பது மாதிரியான ஒரு பயணக் கதை. காமெடி, செண்டிமெண்டுடன் குடும்ப பெண்களிள் உளவியல் பிரச்சினைகளை பேசுகிற படம். இதில் ஆவணப்பட இயக்குனராக ஜோதிகா நடித்துள்ளார்.
இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக பல மாதங்கள் ஆகிறது. பண மதிப்பிழப்பு, தியேட்டர் ஸ்டிரைக், பெரிய படங்கள் ரிலீஸ் போன்ற பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிபோடப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது அடுத்த மாதம் 15ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.