மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் டவுனாகிவிட்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்தார். அதையடுத்து பிரபுதேவா கொடுத்த ஆதரவில் குலேபகாவலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சுந்தர்.சியின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தவர் என்பதால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் மேல்தட்டு ஹீரோக்களுடனான வாய்ப்புகள் குறைந்து விட்டதை அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து வருகிறார்கள். ஆனால், அந்த மாதிரி வாய்ப்பு ஹன்சிகாவை தேடிச்சென்றபோது நடிக்க மறுத்து விட்டாராம். சிறிய வேடங்கள் என்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம், சங்கமித்ரா படம் மீது இன்னமும் ஹன்சிகாவுக்கு நம்பிக்கை இருக்கிறதாம். குலேபகாவலி வெற்றியடைந்தால் அதன்பிறகு தன்னை அந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் காணப்படுகிறாராம்.