சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபுதேவா, ஹன்சிகா நடித்து வரும் படம் குலேபகாவலி. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். எஸ்.கல்யாண் இயக்குகிறார். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை பாபிலோன் தொங்குதோட்ட பின்னணியில் அமைக்க விரும்பினார். ஆனாலும் அதை வித்தியாசமாக செய்ய நினைத்தார். அதாவது கார்களை கொண்டு அந்த தோட்டத்தை அமைப்பது என்பது திட்டம். கலை இயக்குனர் கதிர், கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்தார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.
இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள புறநகரில் பத்து ஏக்கர் நிலத்தில் அரங்கம் அமைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் 100 விதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை 25 நாட்களில் உருவாக்கினார்கள். இந்த பாடல் இப்படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை நடனம் அமைக்க வைத்தால் நன்றாக இருக்குமென்று பிரபு தேவா தயாரிப்பாளரிடம் தன் விருப்பத்தை சொன்னவுடன் உடனே தயாரிப்பாளரும் ஐதராபாத்திலிருந்து நடன இயக்குனர் ஜானியை வர வழைத்தார். ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர்.
இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திக்கை அளிக்கப்பட்டது. ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்திற்கு ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்கிறார்கள்.