ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லண்டனிலிருந்து வந்து பாலிவுட்டைக் கலக்கிய கத்ரினா கைப் போல் தானும் கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டனிலிருந்து நடிக்க வந்தவர் நிகிஷா பட்டேல். கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்து சசிகலாவின் உறவினரான பாஸ் என்கிற ஜெ.ஜெ.டி.வி பாஸ்கரனுக்கு ஜோடியாக தலைவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு கரையோரம், 7 நாட்கள், நாரதன் ஆகிய படங்களில் நடித்தும்கூட அவரால் முன்னணிக்கு வரமுடியவில்லை.
இந்நிலையில் அவ்வப்போது தெலுங்கில் நடித்து வரும் நிகிஷா பட்டேல் தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கே.சி.பொகாடியா தயாரிப்பில், விஜய் ரெட்டி இயக்கத்தில் 1985-ல் ஹிந்தியில் வெளியான படம் 'தேரி மெஹர்பானியன்'.
ஜாக்கி ஷெராஃப், பூனம் தில்லன் நடித்த இந்த படம் வெளியாகி 32 ஆண்டுகளாகின்றன. ஹிந்தியில் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ள கே.சி.பொகாடியா 'தேரி மெஹர்பானி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ஆனால் இரண்டாம் பாகத்தை ஹிந்தியில் இயக்காமல், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்குகிறார் பொகாடியா!
இந்த படத்தில் ஸ்ரீகாந்த், நிகிஷா பட்டேல் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதைக்கும், 'தேரி மெஹர்பானியன்' கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதாம்.