ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஓரம் போ', 'வ' ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர்கள் தான் புஷ்கர் - காயத்ரி. தம்பதியான இவர்கள் முதல் இரண்டு படங்களிலும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்தனர். ஆனாலும் தங்களுடைய நட்சத்திர தொடர்புகள் மூலம் தொடர்ந்து பல்வேறு முன்னணி நட்சத்திரங்களிடம் கதை சொல்ல முயற்சி செய்தனர். அதில் கிடைத்த வெற்றிதான்... 'விக்ரம் வேதா' பட வாய்ப்பு.
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'விக்ரம் வேதா' படம் மூலம் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் அறிமுகமாகியுள்ளார்கள் புஷ்கர் காயத்ரி. முதல் இரண்டு படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெறாத நிலையில், தங்களின் மூன்றாவது படத்திற்கு கடுமையாக உழைத்ததால் வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி, மாதவன் இணைந்துநடித்திருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்தும் வெகுவாகப் பாராட்டியுள்ளாராம். இதுகுறித்து டுவிட்டரில் புஷ்கர் காயத்ரி, ''கிளாஸ் காட்சிகளுடன் ஒரு மாஸ் படத்தை உருவாக்கியுள்ளீர்கள்!'' என ரஜினி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ்புல்லாக இருந்த தியேட்டர்களில் ஒருவாரம் கடந்த பின்னர் தற்போது சற்று கூட்டம் குறைந்தாலும், முதல் மூன்று நாட்களிலேயே அசலை வசூலித்துக் கொடுத்துவிட்டதாம் விக்ரம் வேதா.