ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் அவனில்லை-2வைத் தொடர்ந்து செல்வா இயக்கி வரும் படம் வணங்காமுடி. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மாஜி ஹீரோயினி சிம்ரன், ரித்திகா சிங், அட்டகத்தி நந்திதா, சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதைப்படி உயர்மட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அரவிந்தசாமியை துரத்தும் ஆபத்துக்கள்தான் இந்த படமாம்.
மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ரித்திகா சிங் நடிக்க, சிம்ரன் அவரது தோழியாக நடித்திருக்கிறார். மற்றபடி நந்திதா, சாந்தினி ஆகியோர் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கிறார்களாம். அந்தவகையில், நந்திதா மதுரை பெண்ணாகவும், சாந்தினி தூத்துக்குடி பெண்ணாகவும் நடிக்கிறார்களாம். அவர்களெல்லாம் எதற்காக அங்கிருந்து அரவிந்த்சாமியை தேடி வருகிறார்கள் என்பதுதான் கதையின் சஸ்பென்சாம்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள அரவிந்த்சாமி, பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடிக்க சென்று விட்ட நிலையில், தற்போது வணங்காமுடி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.