அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் என நடிகர் கமல் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.