ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா. இந்தி நடிகையான இவர், தெலுங்கில்தான் நாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் அவர், அடுத்தபடியாக தமிழில், பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் நடிக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். அந்த வீட்டில் தான் முன்பு சமந்தா மார்க்கெட்டில் பிசியாக இருந்தபோது குடியிருந்தாராம்.
இந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணியும், சென்னை எழும்பூரில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். ஆனால அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே பல வருடங்களாக நயன்தாரா குடியிருந்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவை சிலமுறை எதேச்சையாக சந்தித்துள்ளாராம் நிக்கிகல்ராணி. இதையடுத்து அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு வளர்ந்து கொண்டி ருக்கிறதாம். இதை தனது கோலிவுட் வட்டாரங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் நிக்கி கல்ராணி.