14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தனா சேர்ந்த கூட்டம்'.
சூர்யா, கீர்த்தி சுரேஷுடன் ரம்யாகிருஷ்ணன், சுரேஷ் மேனன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ், கார்த்திக் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 'தனா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு பக்கம், இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகளும் இன்னொரு பக்கம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையில் திரைப்படக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரிலீஸ் தேதிக்குள் இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி ஞானவேல்ராஜாவுக்கு கட்டளையிட்டிருக்கிறாராம் சூர்யா.