ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாவனா வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலிப்பிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். பல்சரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு கூட்டு சதியாக செயல்பட்டது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் என்பது உறுதியானது. இதையடுத்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விசாரணைக்கு என்று திலீப்பை அழைத்து சென்ற போலீசார் மாலையில் கைது செய்தனர்.
தொடர்ந்து திலீப், கொச்சியில் உள்ள அங்கமாலியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அலுவா கோர்ட்டில் அடைக்கப்படுகிறார். அவரை நாளை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.