ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் நடித்த பைரவா படத்திற்கு பிறகு கோலிவுட்டில் உச்ச நடிகையாகி விடுவோம் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதன்பிறகு அவருக்கு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படவாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
அதனால் ஏற்கனவே தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து வந்தவர் அடுத்தடுத்து சில படங்களில் அவசரகதியில் கமிட்டானவர், தற்போது மூன்று தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாநதி மற்றும் திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், ஜூலை மாதம் 20-ந்தேதி முதல், ஆகஸ்ட் 20-ந்தேதி வரை ஐரோப்பா நாட்டில் நடக்கிறது. அங்கு பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் அதிரடி ஆட்டமாடும் இரண்டு டூயட் பாடல்கள் படமாகிறதாம். அதனால் ஒரு மாதம் காலத்திற்கு ஐரோப்பா பறக்கிறார் கீர்த்தி சுரேஷ்.