ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 3டி தொழில்நுட்படத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து திரையுலகினருக்கு குறிப்பாக தியேட்டர்காரர்களுக்கு விளக்குவதற்காக 'டிஜிட்டல் சந்திப்பு' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது - லைகா புரொடக்ஷன் நிறுவனம்.
தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய 'லைகா' நிறுவனத்தைச் சேர்ந்த ராஜு மகாலிங்கம், ''முழுக்க முழுக்க 3டியில் படமாக்கப்பட்டிருக்கும் '2.0'வின் பட்ஜெட் 400 கோடியை எட்டியுள்ளது.” என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதோடு, 2.0 படத்தை சீனாவில் ஆயிரக்கணக்கான 3டி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட்தான் இந்திய சினிமாவைப்பொறுத்தவரை இதுவரை மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற சாதனையை தக்க வைத்திருந்தது. தற்போது '2.0' படத்தின் பட்ஜெட் 'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் சாதனையை தகர்த்துள்ளது.
'2.0' படத்தின் எதிர்பார்ப்பு குறித்துப் பேசிய பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம், ''2.0 திரைப்படம் 'பாகுபலி 2'வின் வசூலை மிஞ்சும் என எதிர்பார்க்கிறேன். இப்போது இருப்பதைவிட, '2.0' பட ரிலீஸிற்கு முன்பாக 3டி திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். குறைந்தபட்சம் 300 3டி தியேட்டர்களிலாவது '2.0' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.!'' என்று குறிப்பிட்டுள்ளார்.
'2.0' படம் திட்டமிட்டுள்ளபடி 2018, ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என உறுதிபடக்கூறியுள்ளார் ராஜு மகாலிங்கம்.