ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மஞ்சப்பை படத்துக்கு பிறகு வெற்றியை ருசிக்கவில்லை விமல். அதற்கு பிறகு நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ரெண்டாவது படம் வெளிவரவே இல்லை. இதனால் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற நிலையில் இருக்கிற விமல், தனது பாணி காமெடியில் ஒரு பேமிலி செண்டிமென்ட்ட படம் தயாரித்து, நடிக்க விரும்பினார். மலைக்கோட்டை, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் சொன்ன கதை விமலுக்கு பிடித்து விடவே அதையே தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அதுதான் மன்னர் வகையறா.
விமலுடன் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையாக ஒளிப்பதிவு செய்கிறார், ஜாக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போட்டிருந்த மன்னர் வகையறாவை இப்போது விரட்டி சுறுசுறுப்பாக்கி இருக்கிறார் விமல். தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது மன்னர் வகையறா. அடுத்த மாதம் வெளிவரலாம் என்று தெரிகிறது.