ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் அறம் செய்ய பழகு. இதில் மாநகரம் படத்தின் மூலம் தனி கவனம் பெற்றிருக்கும் சந்தீப் கிஷன் ஹீரோ. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான மெஹரீன் பிர்ஜதா ஹீரோயின். விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சூரியும், அப்புக்குட்டியும் காமெடியன்கள். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி சுசீந்திரன் கூறியிருப்பதாவது:
இந்த நாட்டில் நல்லது செய்பவர்கள் மிகவும் குறைவு. அப்படி செய்பவர்களையும் செய்ய விடாமல் தடுக்க இங்கு ஆயிரம் தடைகள் இருக்கிறது. "அறம் செய்வதற்கு முன்பு அறம் செய்ய பழக வேண்டும்" என்பதுதான் படத்தின் கரு. ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமானால் யாருக்கு அந்த நல்லது தேவையோ அவரை நாம் அடையாளம் காண முடியாது. அதை கண்டுபிடித்து சொல்வதற்கும் நம்மிடம் வாங்கி அவருக்கு கொடுப்பதற்கும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நாம் கொடுக்கும் பணம் அந்த உதவி தேவைப்பட்ட மனிதனுக்கு முழுமையாக செல்வதில்லை இதுதான் நிதர்சனம்.
ஒரு நடுத்தர குடும்பத்து ஹீரோ, அவனைச் சுற்றி நடக்கிற விஷயங்கள்தான் கதை. தன் சக்திக்கு ஏற்ற வகையில் ஒரு நல்லது பண்ணனும்னு நினைக்கிறான். அதற்கு பல தடைகளை சந்திக்கிறான். அந்த தடைகளை மீறி அவன் நினைத்ததை செய்தானா என்பதுதான் கதை. மாவீரன் கிட்டுவில் சாதிக்கு எதிராக பேசியிருந்தேன். அறம் செய்ய பழகுவில் அறம் பற்றி கமர்ஷியல் கலந்து பேசியிருக்கிறேன். என்கிறார் சுசீந்திரன்.