ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி பட நாயகன் பிரபாசுக்கு தற்போது 37 வயதாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க தயாராகி விட்டனர். ஆனால், பாகுபலி படத்தில் நடித்து வந்த அவர், அந்த படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் 5 வருடங்களுக்கு திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர்.
இந்தநிலையில், பாகுபலி-2 படம் வெளியானபோது பிரபாஸ்-அனுஷ்கா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், பின்னர் அது வதந்தி என்பது தெரியவந்தது. அதையடுத்து இப்போது பிரபல சிமெண்ட் கம்பெனி தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை, பிரபாசுக்கு அடுத்த ஆண்டில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்திருப்பதாக பிரபாஸ் போட்டோவுடன் அந்த பெண்ணின் போட்டோவை இணைத்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இதுப்பற்றி பிரபாஸ் தரப்பிலோ அல்லது அந்த சிமெண்ட் கம்பெனி தொழிலதிபர் தரப்பிலோ உறுதிசெய்யப்பட்வில்லை. ஆகவே இதுவும் வதந்தி தான் என்கிறார்கள்.