விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கடந்த வருடம் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகவும் கவனிக்கப்பட்டவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் படத்தை அவரே தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.
'நரகாசூரன்' என பெயரிடப்பட்ட இந்த படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டினார் இயக்குநர் கௌதம் மேனன். ஆரம்பத்தில் அவரது பேனரில் படம் இயக்க உடன்படாமல் இருந்தார் கார்த்திக் நரேன். பின்னர் பல்வேறு வழிகளில் முயன்று அப்படத்தின் தயாரிப்பாளராகிவிட்டார் கௌதம் மேனன்.
இந்த படத்தில் அரவிந்தசாமி ஒரு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக 'மாநகரம்' படத்தில் நடித்த தெலுங்கு நடிகரான சந்தீப் ஒப்பந்தமாகியுள்ளார். நரகாசுரன் படத்தை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடும் திட்டத்தில் இரண்டு மொழிகளுக்கும் பரிச்சயமான முகங்களை தேடிவருகின்றனர். அந்த அடிப்படையிலேயே சந்தீப்பை கமிட் பண்ணியுள்ளனர். இதன் மூலம் நரகாசுரன் படத்தில் தெலுங்கு டச் கொடுத்துள்ளார் இயக்குநர்.