14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழில், யாருடா மகேஷ், மாநகரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன். தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் மாயவன், சுசீந்திரன் இயக்கும் அறம் செய்து பழகு ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் அடுத்தபடியாக ஹம்தும், தெறி மேரி கஹானி உள்பட பல இந்திப் படங்களை இயக்கிய குணால் கோஹ்லி இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இதற்கு முன்பு தெலுங்கில் ரொமான்டிக் கதைகளில் நடித்துள்ள சந்தீப் கிஷனை இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக்குகிறாராம் குணால் கோஹ்லி. இப்படத்தில் நாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது ஸ்கெட்ச், கொலையுதிர்காலம் இந்தி பதிப்பில் நடித்து வரும் தமன்னா, அந்த படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடை பெறுகிறது. சச்சின் ஜோஷி இப்படத்தை தயாரிக்கிறார்.