மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்வில் ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஆதரவும், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் நடிகர் கார்த்தி இன்று காலை ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா அவருடைய ரசிகர்களைச் சந்தித்து உரையாடினார். அதைத் தொடர்ந்து கார்த்தியும் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். நிகழ்ச்சியில் சில திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டு கார்த்தியைப் பற்றி புகழ்ந்து பேசினர்.
கார்த்தி அவருடைய ரசிகர்களைச் சந்தித்துப் பேசியது அவர் திரையுலகம் சம்பந்தப்பட்டது. ஆனால், மேடையில் வைக்கப்பட்ட பேனரில் இடம் பெற்ற வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாதி பற்றிய குறியீடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த பேனரில், “பருத்தி வீரனாய்' அரிதாரம் பூசி பத்தாம் ஆண்டில் 'தீரனாய்' அவதரிக்கும் எம் தலைவனுக்கு பிறந்த நாள் விழா” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாசகத்தில் இடம் பெற்றுள்ள 'தீரனாய்' என்ற வார்த்தைதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விழாவில் பேசிய டிவி பத்திரிகையாளர் ஒருவர் கார்த்தி எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவார் என்று ஜோசியம் சொன்னதுதான் ஹைலைட்.
தமிழ்நாட்டில் சி.எம். பதவிக்கு இன்னும் எத்தனை நடிகர்கள்தான் ஆசைப்படுவார்களோ..?.