ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் மும்பை தாராவி பகுதியில் நடைபெறுவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தாராவி போன்ற செட்டை உருவாக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 'கபாலி' படத்திற்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். அது மட்டுமல்ல, ரஜினி படத்துக்கான கம்போசிங் வேலைகளை சந்தோஷ் நாராயணன் துவங்கி விட்டார். தனுஷ் நடித்த கொடி படத்துக்கு இசையமைத்தபோது சந்தோஷ் நாராயணன் அநியாயத்துக்கு டார்ச்சர் செய்திருக்கிறார். அதை மனதில் வைத்து இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் வேண்டாம், ஷான் ரோல்டன் இசையமைக்கட்டும் என்று சொன்னாராம் தனுஷ்.
இதற்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டநிலையில், சந்தோஷ் நாராயணன்தான் தனக்கு சரியாக இருப்பார், அதனால் அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் பா.ரஞ்சித். கடந்த சில மாதங்களாக இழுபறியாகவே இருந்த இந்த விவகாரம் சில தினங்களுக்கு முன்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.
தனுஷிடம் சொல்லி அவரது மனதை மாற்றி சந்தோஷ் நாராயணனை ஓகே பண்ண வைத்துள்ளனர். அதன் பிறகே அவர் இறங்கி வந்தாராம்.