ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் ஏமாற்றம் தந்தாலும், இரண்டாவது பாகத்தில் சண்டைக்காட்சி, வசனங்கள் என தனது 'தேவசேனா' கேரக்டரில் மலையளவு பிரமாண்டம் காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இனி மூன்றாம் பாகம் உருவாகுமா என இப்போதே சொல்ல முடியாது தான்.. ஆனாலும் இந்தப்படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் மட்டும் இந்த 'தேவசேனா' என்கிற பெயரை உயிர்ப்பாக வைத்திருக்கவே விரும்பினார்.
அதற்காக, தான் இந்தியில் தொலைக்காட்சி ஒன்றிற்காக எழுதி வரும் 'ஆரம்ப்' என்கிற புராண நாடகத்தில் இடம்பெறும் கதாநாயகிக்கு தேவசேனா என பெயர் சூட்டிவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த வீர மங்கை இளவரசியாக இந்த தேவசேனா கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். இந்த புராண கதையில் தேவசேனா கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா.. ஆம்.. கோ, புறம்போக்கு படங்களில் நடித்து தற்போது படவாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் அதே கார்த்திகா தான்.