ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழ்நாட்டில் இருந்த 3500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரிக்கட்ட வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைக்க அரசு முயற்சிப்பதும், அதனை பெண்கள் திரண்டு சென்று தடுத்து நிறுவத்துவதும் நடந்து வருகின்றன. இதனையே கதை களமாக கொண்டு உருவாக்கி உள்ள படம் திறப்பு விழா. டாஸ்மாக்கிற்கு திறப்பு விழா நடத்த அரசு துடிப்பதும் அதை எதிர்த்து போராடி ஹீரோயின் உயிர்விடுவதும்தான் படத்தின் கதை.
பூமியா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரீனா பேகம் தயாரிக்கிறார். இயக்குனர் ஹரியிடம் வேங்கை, சிங்கம், பூஜை படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய கே.ஜி.வீரமணி இயக்குகிறார். விருத்தாச்சலம், நெய்வேலி, கல்பாக்கம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுள்ளது. ஜெயஆனந்த் என்ற புதுமுகத்துடன் ரஹானா(மனீஷா ஜித்) நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஜி.எம்.குமார், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளர், வசந்த ரமேஷ் இசை அமைக்கிறார்.