ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கதை திரைக் கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். அதன் பிறகு தாயம் படத்தில் நடித்தார். தற்போது நான் அவளை சந்தித்தபோது, பயமா இருக்கு, பொது நலன் கருதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக தபால்காரன் என்ற படத்தில் தபால்காரனாக நடிக்க இருக்கிறார்.
ஸ்ரீ வீனஸ் புரொடக்ஷ்ன் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷின் உதவியாளர் ராஜ்மோகன் இயக்குகிறார். சந்தோஷ் பிரதாப் ஜோடியாக நிஹாரிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். லொள்ளுசபா சாமிநாதன், பேராசியர் ஞானசம்பந்தம், டெல்லி கணேஷ், முனீஷ்காந்த், வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறர், நீரோ பிரபாகரன் இசை அமைக்கிறார்.
வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு தபால்காரன் வேலைகிடைக்கிறது. அரசு வேலையாக இருந்தாலும் வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை. இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கும். இது ஒரு முழுநீள வணிகப்படம் பொழுது போகிற போக்கில் சமூகக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர் ராஜ்மோகன்.