ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை கிண்டியில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இவர்களுடன் கமலும் சென்றிருந்தார்.
மத்திய அமைச்சருடன் நடந்த இந்த கூட்டத்தில், தென்னிந்திய திரைப்பட துறையில் உள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், கமல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய விஷால், நவீன தொழில்நுட்ப முறையில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெளிவருவதால் திரையுலகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தென்னிந்திய திரைப்பட துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி திரைப்பட துறைக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம். அது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுப்பது குறித்தும் பேசி உள்ளோம். எப்படி தடுப்பது என்பதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
இது தொடர்பாஜ உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் விரைவில் நடக்க உள்ளது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். திருட்டு விசிடி.,யை ஒழிப்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. தமிழ் திரைப்பட துறையின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.