சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதையடுத்து, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை, கடுகு ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது நேத்ரா, ரீங்கார ஓசை, ரா ரா ராஜசேகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கிறார் சுபிக்ஷா.
அந்த படம் குறித்து அவர் கூறுகையில், நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. கடுகு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ள டைரக்டர் ஏ.வெங்கடேஷ், அதற்கான டப்பிங் பேசியபோது, நான் நடித்துள்ள பகுதியை பார்த்திருக்கிறார். அதில் எனது பர்பாமென்ஸ் அவருக்கு பிடித்ததால் நேத்ரா படத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த வகையில, கடுகு படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்காக கிடைத்த பரிசு என்றுதான் நேத்ரா படத்தை சொல்ல வேண்டும். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கனடாவில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் எனக்கான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விடும்.
மேலும், கடுகு படம் வெளியான பிறகு பல டைரக்டர்கள் என்னை தொடர்பு கொண்டு எனது நடிப்பை பாராட்டினர். ஐந்து டைரக்டர்கள் என்னை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். அதில், எந்தெந்த கதைகளில் நடிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். நேத்ரா படப்பிடிப்பு முடிந்ததும் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கத் தொடங்குவேன் என்கிறார் சுபிக்ஷா.