விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கர்ஸா எண்டர்டைன்மெண்ட் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள படம் பீச்சாங்கை. இதில் அஞ்சலி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவான ஆர்.எஸ்.கார்த்திக் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் போலீஸ் டார்ச்சருடன் படத்தில் நடித்து முடித்ததாகவும் கார்த்தி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
இடது கை பழக்கம் உள்ள ஒருவனின் கதைதான் பீச்சாங்கை. இந்தப் படம் குறும்படமாக இருந்து இப்போது திரைப்படமாக மாறியிருக்கிறது. இதனை படமாக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் நாங்களே தயாரிக்க முடிவு செய்து என் வீட்டை அடமானம் வைத்து படத்தை ஆரம்பித்தோம். அதன் பிறகு பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராக வந்தார்.
படத்தின் பெரும் பகுதி பொதுமக்கள் கூடும் இடத்தில் நடந்தது. எல்லா இடங்களிலும் அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனாலும் போலீசார் எங்களை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்தார்கள். தனியார் இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று பணம் கேட்டு டார்ச்சர் செய்தார்கள். சிலர் என்னை ஹீரோ என்றும் பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷனில் நாள் முழுக்க உட்கார வைத்தார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று ஒரு நாளைக்கு பத்து போலீசாவது வந்து நிற்பார்கள். 100 ரூபாய் கொடுத்தால் போய்விடுவார்கள். 100 ரூபாயில் பொதுமக்கள் இடையூறு தீர்ந்துவிடுமா என்று கேட்கத் தோன்றும் கேட்கவில்லை. எல்லா டார்ச்சரையும் தாண்டி படத்தை முடித்தோம் என்றார் ஆர்.எஸ்.கார்த்திக்.