ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கட்டப்பாவ காணோம் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படத்தை வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்கி வருகிறார். சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். பாஸ் மூவீஸ் சார்பில் விஜய்.கே.செல்லையா தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இதன் படப்பிடிப்புகள் கடந்த 6ம் தேதி முதல் காஷ்மீரில் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு இரண்டு பாடல் காட்சியும், கதையின் ஒருபகுதியும் படமாகிறது. காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவினர் அங்கு தற்போது வீசும் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி உள்ளனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. இதுகுறித்து இயக்குனர் வினோத் கூறியதாவது:
தற்போது நாங்கள் காஷ்மீரில் உள்ள குல்மார்க் மற்றும் பால் காம் பகுதிகளில், எங்கள் படத்தின் சில முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகின்றோம். கடுமையான பனி பொழிவின் காரணமாக இங்கு எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டிருக்கிறது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. எனினும் எங்கள் படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பால் நாங்கள் படப்பிடிப்பை திட்டமிட்டது போல சரியாக நடத்தி வருகின்றோம் என்கிறார் இயக்குநர் வினோத்.