ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம், ‛வாலு' விஜயசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வடசென்னை கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு காதல்மன்னன் டைரக்டர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படம் போன்று இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார் விக்ரம். இந்த படத்தில் விக்ரமுடன் முதன்முறையாக சூரி காமெடியனாக இணைந்திருப்பது போன்று தமன்னாவும் முதன்முறையாக விக்ரமுக்கு ஜோடியாகியிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டிருந்த செட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தது. அதையடுத்து தற்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளது யூனிட். இதற்கு முன்பு விக்ரமின் ஆக்சன் மற்றும் முக்கிய வசன காட்சிகளை படமாக்கிய விஜயசந்தர், இப்போது பாண்டிச்சேரியில் விக்ரம் - தமன்னா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார். பாண்டிச்சேரி கடற்கரை பகுதியில் அவர்களது காம்பினேசன் காட்சிகள் படமாகிறதாம். மேலும், இந்த படத்திலுள்ள ஒரு டூயட் பாடலுக்காக விக்ரம்-தமன்னா யூனிட்டுடன் பாங்காங் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.