மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் திருநங்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கதை பண்ணியிருந்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற மாற்றத்தை நோக்கி திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.
அப்போது அவர் பேசும்போது, திருநங்கைகள் அஷ்டலட்சுமிகள். அதனால்தான் வடஇந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளை அவர்களை வைத்து விளக்கேற்றி தொடங்குகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் எனது படங்களில் நடித்து சம்பாதிப்பதில் அவர்களது பெயரில் ஒரு கணக்குத் தொடங்கி பணம் சேமிக்கப்போகிறேன். அந்த பணத்தைக்கொண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்போகிறேன். அவர்களுக்கென ஒரு கட்டிடமும் கட்டிக்கொடுப்பேன்.
மேலும், ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளேன். ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்தும் வருகிறேன். அதோடு, திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதையில் மீண்டும் நான் படமெடுப்பேன் என்று பேசியுள்ள லாரன்ஸ், திருநங்கைகள் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப்போகிறேன் என்றும் பேசியுள்ளார்