ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவை யார்தான் வந்து காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளிவந்து கொண்டு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. டிஜிட்டல் சினிமாவாக மாறிய பிறகு ஒரு வாரம் கூட இடைவெளி இல்லாமல் படங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.
அப்படி வெளிவரும் படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் திணறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. சில படங்களுக்கான புகைப்படங்களைக் கூட பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லை. அப்புறம் எப்படி படங்களைப் பற்றிய தகவல்கள் போய்ச் சேரும். இவர்களுக்கெல்லாம் யார்தான் 'ஐடியா' கொடுக்கிறார்களோ தெரியவில்லை.
இந்த 2017ம் ஆண்டில் முதல் முறையாக ஒரு வெள்ளிக்கிழமையில் அதிகப் படங்கள் வெளியாகப் போகும் நாளாக நாளை மறுநாள் 24ம் தேதி இருக்கப் போகிறது. அன்றைய தினம் “465, 1 எம், அரசகுலம், ஆக்கம், தாயம், எங்கிட்ட மோதாதே, இவன் யாரென்று தெரிகிறதா, கடுகு, பாம்பு சட்டை, வைகை எக்ஸ்பிரஸ், சாந்தன்,” என 11 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அன்று வெளிவருவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட 'ஒரு கனவு போல, விழித்திரு' ஆகிய படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
மேலே சொன்ன 11 படங்களில் ஒரு சில படங்கள் 24ம் தேதி வெளியாகாத சூழ்நிலை ஏற்படலாம். அந்த 11 படங்களுடன் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'கட்டமராயுடு' தெலுங்குப் படமும் வெளியாகிறது. சில நேரடித் தமிழ்ப் படங்களை விட இந்தத் தெலுங்குப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
11 படங்களுமே முன்னணி நடிகர்கள் நடிக்காத படங்கள்தான். அதனால், அந்தப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பினர் இப்படியான கூட்டமான வெளியீட்டிற்கு ஒரு முடிவு கட்டினால் மட்டுமே அது தமிழ்ப் படங்களின் எதிர்காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும்.