மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமூக வலைத்தளங்களில் தங்களை லட்சக்கணக்கான பேர் பின் தொடர்ந்தால், தாங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி என்ற எண்ணத்தில் சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைத் தொடர்பவர்களும், சினிமா ரசிகர்களும் மிகவும் தெளிவானர்கள் என்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது களத்தில் இறங்கி போராடியவர்களில் ராகவா லாரன்ஸ், ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். தங்களை தமிழ்க் கலாசாரத்தின் காவலர்களாகவே காட்டிக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே ஆபாசக் குப்பைகள் என்பதும், கலாசாரத்தையே கெடுக்க வந்த படங்கள் என்பதும் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்த ஒன்றுதான்.
அதனால்தான் ராகவா லாரன்ஸ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் மோசமான தோல்வியைத் தழுவியது. அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த புரூஸ் லீ படம் முதல் நாளிலேயே தோல்விப் படம் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால் ஒட்டுமொத்த ஆபாசமும், விரசமான வசனங்களும் படம் முழுக்க நிறைந்து கிடக்கிறது.
ஒட்டு மொத்த விமர்சகர்களும், சமூக வலைத்தளங்களிலும் புரூஸ் லீ படத்தைப் பற்றி கழுவி, கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் நீங்கள் நடித்தது போதும், இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான பொதுவான கமெண்ட்டாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷுக்கு புரூஸ் லீ தொடர்ச்சியான 4வது தோல்விப் படம் இது.
புரூஸ் லீ படம் ஓடாது என்பதை நாம் கூட சொல்லவில்லை, படத்தில் நாயகனாக நடித்த, இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் கூட புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது. எப்போது பார்த்தாலும் டிவிட்டரில் தன் வீர, தீர, பிரதாபங்களைப் பற்றிப் பெருமைபட்டுக் கொள்ளும் ஜி.வி.பிரகாஷ் நேற்று புரூஸ் லீ படம் வெளியானதிலிருந்து இதுவரை அந்தப் படம் பற்றி ஒரு வார்த்தை கூட டிவீட் செய்யவில்லை. மொக்கை படத்தைக் கூட பிரபலங்களின் ரி-டிவீட்டிற்காகப் பாராட்டித் தள்ளுபவர்களின் டிவீட்டைக் கூட ஜி.வி.பிரகாஷ் கண்டு கொள்ளவில்லை.
இதனால், ஜி.வி.பிரகாஷை வைத்து அடுத்தடுத்து படங்களை வெளியிட உள்ள தயாரிப்பாளர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷின் தொடர் தோல்வி யாருக்கு மகிழ்ச்சி தருகிறதோ இல்லையோ அந்த ராசி பெயர் கொண்ட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருக்கு பலத்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.