ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மரகதநாணயம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் காமெடியானாக நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர் சந்ஷோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த திபு நினான் தாமஸ் 'மரகதநாணயம்' படத்துக்கு இசை அமைத்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பராம். அதன் காரணமாக 'மரகதநாணயம்' படத்தின் ஆடியோவை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ரசிகர்களை கவர்ந்த ஐந்து திரைப்படங்களை இயக்கிய ஐந்து இயக்குனர்களை 'மரகத நாணயம்' படக்குழுவினர் கௌரவித்தனர். 'உறியடி' படத்தை இயக்கிய விஜயகுமார், 'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், 'சைத்தான்' படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்தான் அந்த ஐவர். இந்த கெளரவிப்பு இவ்விழாவில் சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.
''தமிழ் சினிமாவில் இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். அவர்களின் திறமைகளை பாராட்ட வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு இந்த கௌரவத்தை செய்துள்ளேன். எங்கள் பட நிறுவனம் திறமையுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பட வாய்ப்புகள் வழங்கவிருக்கிறது. நல்ல கதைகள் வைத்திருப்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்'' என்றார் மரகத நாணயம் படத்தின் தயாரிப்பாளர்.