ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகம் அஜய், நாடோடிகள் புகழ் அபிநயா நடிப்பில் வெளியாகியுள்ள ‛நிசப்தம்' படம் ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகினர் மத்தியிலும் ஏகோபித்த பாராட்டை பெற்று வருகிறது. பெங்களூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மைக்கேல் அருண். 8 வயது சிறுமியை குடிகாரன் ஒருவன் சீரழிக்கிறான். இதன்பின்னர் அந்த குழந்தை படும் பாடு, அவரின் பெற்றோர் படும் பாட்டை அவ்வளவு உருக்கமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல். இதில் எட்டு வயது சிறுமியாக சாதன்யா நடிக்கிறார். படங்களை ஓட வைக்க விளம்பரம் என்ற பெயரில் கோடி கோடியாய் செலவிட்டு கடைசியில் அதுவும் புஸ்ஸாகிவிடும் இந்தக்காலக்கட்டத்தில் பெரிய விளம்பரங்கள் இன்றி வெளியாகியுள்ள இந்த நிசப்தம், சத்தமின்றி மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. மக்கள் மட்டுமல்ல திரையுலகினரும் இப்படத்தை மனதார பாராட்டி வருகின்றனர்.
சாக்ஷி அகர்வால் : நிசப்தம் படத்தின் ராக் ஸ்டாரே சிறுமி சாதன்யா தான் என்று பாராட்டியிருக்கிறார்.
நந்திதா : நிசப்தம் படத்திற்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை பார்க்க மிகவும் ஆவலாய் உள்ளேன். இதுபோன்ற நல்ல படத்தை அனைவரும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் : மனதை தொட்ட மிகவும் நெகிழ்ச்சியான படம், இதுபோன்ற நல்ல படத்தை ஆதரியுங்கள், தியேட்டரில் சென்று படம் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
சுஜா வருணீ : நிசப்தம் படத்தை நேற்று பார்த்தேன், படம் பார்த்த வலி என் மனதை விட்டு இன்னும் விலகவில்லை. இன்றைக்கு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையில் நடக்கும் பாலியல் கொடுமை சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் படம். உங்கள் பிள்ளைகளுடன் சென்று படத்தை பாருங்கள். இது படம் அல்ல, பாடம் என்று கூறியுள்ளார்.
நடிகை தன்ஷிகா : படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து போது இருந்த வலியை சொல்ல முடியாத ஒன்று. இன்னும் அதிலிருந்து நாள் மீளவில்லை. பெண்களுக்கு சமுதாயத்தில் எத்தனையோ கொடுமைகள் நடக்கிறது. இது எப்போது தீரும், பெண்கள் எப்போது பாதுகாப்பாக தனியாக நடந்து போவார்கள். பெண்கள் தினத்தை கூட என்னால் கொண்டாட பிடிக்கவில்லை. படத்தில் அந்த சிறுமிக்கு நடக்கும் சம்பவங்களை பார்த்து ஜீரணிக்க முடியவில்லை. படத்தை ஹிட்டாக்க எல்லோரும் படம் பாருங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இது எனக்கு நடந்த ஒரு சம்பவம் போன்று நினைக்கிறேன். பெற்றோர்கள் குழந்தைகளை அலட்சியமாக விடுகிறார்கள். இந்தப்படம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது, அனைவரும் கண்டிப்பாக படத்தை பாருங்கள் என்றார்.