ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளவட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற பிடிவாதமாக இருந்து வந்தவர்தான் தமன்னா. அதனால் சில சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு சென்றபோது தடாலடியாக மறுத்து வந்தார். ஆனால் பாகுபலிக்கு பிறகு எகிறும் என்று எதிர்பார்த்த அவரது மார்க்கெட் டல்லடிப்பதால் தற்போது படம் கிடைத் தால் போதும் என்கிற மனநிலைக்கு மாறியிருக்கிறார் தமன்னா. அதன்காரணமாக முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சிம்புவுடன் டிரிபிள் ஏ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர், அதையடுத்து தமிழில் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதே விக்ரம் நடித்த ஒரு படத்திற்கு முன்பு அழைப்பு விடுத்தபோது மறுத்த வர்தான் தமன்னா.
அதேபோல், தெலுங்கில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, வரலாற்று கதையில் நடிக்க வயது வித்தியாசம் பார்க்கக்கூடாது. நாம் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில், இந்த படத்தில் நான் என்டிஆரின் மனைவி ரோலில் நடிக்கிறேன். அது பெருமையில்லையா என்று கூறிய தமன்னா, நரைமுடி நடிகருடன் நடிப்பது குறித்த விமர்சனங்களில் ஆந்திராவில் எழுந்தபோது, அப்படியென்றால் சமீபத்தில் காஜல்அகர்வால்கூடத்தான் சிரஞ்சீவியுடன் நடித்தார். அதேபோல்தான் இதுவும் என்று நறுக்கென்று சொல்லி முடித்துக்கொண்டாராம் தமன்னா.