ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கத்தி' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கி வரும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படப்பிடிப்பும் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் தலைப்பை எப்போது அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் நேற்று படத்தின் இயக்குனர் முருகதாஸ் நேற்று அறிவித்தார்.
“ஜுன் 23ம் தேதி எங்களது விருந்தினராக தியேட்டர்களில் இருங்கள், ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என டிவீட்டியுள்ளார் முருகதாஸ். “காத்திருக்கிறேன் சார், கொண்டாட வேண்டிய நாள்” என படத்தின் நாயகன் மகேஷ் பாபுவும் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதைத் தொடர்ந்து விரைவில் படத் தலைப்பை அறிவிக்க வாய்ப்புள்ளது.