ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பமானதிலிருந்தே கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பல கருத்துக்களை அவருடைய டிவிட்டர் கணக்கில் பகிர்ந்து வருகிறார். கடந்த பத்து நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலவரம் குறித்தும் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் டிவிட்டரிலேயே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
கவர்னர் மாளிகைக்கு உங்கள் எண்ணங்களை மெயிலாக அனுப்புங்கள், உங்கள் தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏக்களுக்கு நல்ல வரவேற்பு கொடுங்கள் என கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் எழுதியதாக கவிதை ஒன்று வாட்ஸ்-அப்பில் வெகு வேகமாகப் பரவியது. சிங்கமில்லாக் காடு ... என்ற தலைப்பில், ‛‛செங்கோல் வாங்கிய சிங்கமொன்று ஜெயமாய்க் காட்டை ஆண்டது மறுமுறை ஆட்சியைப் பிடித்த பின்னும் மர்மமாய் அதுவும் மாண்டது...'' என்று அந்த கவிதை உள்ளது.
ஆனால் கமல்ஹாசன் அதை நான் எழுதவில்லை என டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், ‛‛வாட்ஸ்-அப்பில் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல, செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்'' என்று கூறியுள்ளார். ஆனாலும், பலர் அந்தக் கவிதையை இன்றும் பகிர்ந்து வருகின்றனர்.
கமல்ஹாசன் பேசினாலும் புரியாது, டிவிட்டரில் கருத்துக்களைப் போட்டாலும் புரியாது, அப்படியிருக்கும் போது புரியும்படியான ஒரு கவிதையை அவர் நிச்சயம் எழுதியிருக்க மாட்டார் என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.
கமல்ஹாசனும் பல கவிதைகளை எழுதுபவர்தான். உண்மையிலேயே அவர் எழுதிய கவிதை கூட இந்த அளவிற்குப் பரவியிருக்காது. ஆனால், அவர் பெயரில் யாரோ ஒருவர் எழுதிய கவிதை ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.