ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்ட போட்டியில் நடிகர் லாரன்ஸ் தீவிரமாக கலந்து கொண்டார். இதனால் மாணவர்கள், இளைஞர்களிடையே அவர் ஹீரோவானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன், மணிகண்டன் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கினார். யோகேஸ்வரன் தங்கையின் படிப்பு செலவையும் ஏற்றார்.
இந்த நிலையில் நேற்று 1200 கிலோ கொண்ட கேக் வெட்டி மாணவர்களுடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடினார்.
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரை கேக் வெட்டச் செய்து அதனை அவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இன்று அரசியலில் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் இந்த வெற்றி விழா தேவையா என்று சிலர் நினைக்ககூடும். ஒருவாரம் மிகவும் சிரமப்பட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தவிர்க்க முடியவில்லை.
நான் பன்னீர் செல்வத்தை சந்தித்து இந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கத்தான். ஆனால் நான் அவருக்கு ஆதரவு தருவதாக கிளப்பி விட்டார்கள். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் என்னை அழைத்து பாராட்டினார் உடனே நான் பா.ஜகவிடம் பணம் பெற்றேன் என்றார்கள். என் கையில் வைத்திருந்த செல்போனை பணக்கட்டாக மாற்றி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்தார்கள். தொடர்ந்து மிரட்டல்கள், கட்சியில் சேரச் சொல்லி வற்புறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
நாங்கள் தர்மத்திற்காக போராடுகிறோம். எங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அரசியலும் தெரியாது. தொடர்ந்து எங்களை கா£யப்படுதி அரசியலுக்கு வர வைத்துவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தில் இறந்த இளைஞர்களின் குடும்பத்தை நான் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க இருக்கிறேன். என்றார்.