மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோர் சினிமாவிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அவர்களைத் தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் உள்பட மேலும் பலரும் விஜய் டிவியில் இருந்து சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற சீரியல்களில் நடித்த நிதின் கார்த்திக்கும் ஒருவர். இவர் தற்போது 468, நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவும் செய்யலாம் ஆகிய படங்களில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
இதுபற்றி கார்த்திக் கூறுகையில், ஆபீஸ் சீரியலில் நடித்து வந்தபோதுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து சினிமாவில் கொடுக்கிற என்ட்ரி சரியாக இருக்க வேண்டும் என்று பல கதைகள் கேட்டு அதில் 468, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல ஆகிய இரண்டு படங்களின் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். மேலும், நான் இந்த மாதிரியான நடிகனாகத்தான் வரவேண்டும் என்கிற எந்த ஆசைகளும் வைத்துக் கொள்ளவில்லை. எந்த வேடத்தில் நடித்தாலும் நல்ல நடிகன் என்ற பெயரெ டுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் இந்த படங்களில் நடிக்கிறேன்.
முக்கியமாக, விஜய் டிவியில் நடித்து பிரபலமானவர்கள் சினிமாவிலும் ஜெயித்து விடலாம் என்ற செண்டிமென்டை கருத்தில் கொண்டு நான் சினிமாவில் நடிக்க வரவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்கனவே எனக்குள் இருந்தது. மேலும், நான் சினிமாவில் நடிக்க வந்தபோது சீரியல் நடி கன் என்பதால் சிலர் மைனஸாககூட பார்த்தார்கள். ஆனால் அந்த எண்ணங் களை உடைத்தெறிய வேண்டும் என்று இந்த படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறேன்.
மேலும், இதன்பிறகு சின்னத்திரைக்கு செல்லும் ஐடியா எதுவும் இல்லை. அப்படி சென்றால் கல்லூரிக்கு வந்த பிறகு பள்ளிக்கு சென்றது மாதிரியாகி விடும். அதனால் இனிமேல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்குள் உள்ளது என்று கூறும் கார்த்திக், சின்னத்திரையில் இரண்டே சீரியல்களில் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்ற நான், இப்போது நடித்துள்ள இரண்டு படங்களில் சினிமாவிலும் நல்ல நடிகன் என்ற அங்கீகாரத்தைப் பெற்று விடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.