Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போராட்டாக்காரர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும் - ராம்கோபால் வர்மா திமிர் பேச்சு

21 ஜன, 2017 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Ram-gopal-varma-controversial-speech-about-jallikattu-protest

சிவா என்ற இளைஞன் ஒரு சிறிய ஊரிலிருந்து படிப்பதற்காக விஜயவாடா வருகிறான். கல்லூரியில் அரசியல்வாதிகள், ரவுடிகளின் ஆதரவைப் பெற்று தேர்தலில் நிற்காமலேயே மாணவர் தலைவனாக இருக்கும் ஜே.டி. என்பவனை எதிர்க்க ஆரம்பிக்கிறான் சிவா. நடைபெற இருக்கும் கல்லூரித் தேர்தலில் தன் நண்பனை நிறுத்துகிறான் சிவா. இதனால் ஆத்திரமடைந்த ஜே.டி. ரவுடி பவானி துணையுடன் சிவாவின் நண்பன் மல்லியைக் கொலை செய்கிறான். வெகுண்டெழும் சிவா, அரசியல்வாதிகளின் ஆதரவுடன், ரவுடியிசம் செய்யும் பவானி, ஜே.டி. யை எதிர்க்க தானும் களத்தில் இறங்குகிறான். ஆனால், இப்போது சென்னை மெரீனாவில் மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்துகிறார்களே அப்படியல்ல, ரவுடியை எதிர்க்க அவனும் ரவுடியாகவே மாறுகிறான். அதன் பின் சிவாவிற்கும் பவானிக்கும் நடக்கும் போராட்டம்தான். தமிழில் 1990ம் ஆண்டு நாகார்ஜுனா, அமலா நடிக்க ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'உதயம்' படத்தின் கதை. தெலுங்கில் 'சிவா' என்ற பெயரில் 1989ல் வெளிவந்த இந்தப் படத்தின் கதை கூட ஒரிஜனல் கதை அல்ல, ப்ரூஸ் லீ நடித்து வெளிவந்த 'வே ஆப் த டிராகன்' படத்தின் காப்பிதான்.


உதயம் படம் தமிழில் டப்பிங் படமாக வெளிவந்தாலும் 175 நாட்கள் ஓடியது. அரசியல்வாதிகளை எதிர்ப்பது, ரவுடிகளை எதிர்ப்பது ஆகியவற்றையெல்லாம் திரையில் காட்டி இளைஞர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றிய பல இயக்குனர்கள் நிஜ வாழ்வில் வேறுவிதமாக இருப்பார்கள் என்பதற்கு ராம்கோபால் வர்மா சரியான உதாரணம்.


இது எதற்கு இப்போது என்கிறீர்களா..?. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் போராட்டத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் இன்று பிரபலமாக இருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஜல்லிக்கட்டுக்கு எதிராக நேற்று டிவீட் செய்திருக்கிறார்.


ஆந்திராவில் 'கொடிபன்டம்' என்ற பெயரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டைப் பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் இளைஞர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும் என்று அவர் டிவீட்டியிருக்கிறார்.


ராம்கோபால் வர்மா இதுவரை எடுத்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறைகளையும், ஆபாசங்களையும் கட்டவழித்துவிடப்பட்ட படங்களே. மும்பை தாக்குதல் சமயத்தில் கூட முதல்வருடன் சென்று மக்களின் வலிகளுக்கிடையே அதை எப்படி படமாக்கி பணம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றவர். ராம்கோபால் வர்மா இயக்கிய பல படங்கள் தழுவல் படங்களாகவோ, ஆந்திராவில் நிஜ வாழ்வில் இருந்த ரவுடிகள் சம்பந்தப்பட்ட படங்களாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டவர் வழக்கம் போல பரபரப்பை ஏற்படுத்தி பெயர் வாங்குவதற்காக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி டிவீட்டுகளைப் போட்டுள்ளார். அவருக்கு தமிழ் இளைஞர்களும் மற்றவர்களும் சரியான பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in