ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் விதார்த். குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, கடோத் கஜன், வண்டி, பில்லா பாண்டி, 88 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் குரங்கு பொம்மை, வண்டி படங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு கிடாயின் கருணை மனு படப்பிடிப்பு முடிந்து திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே விதார்த் நடித்து வருடக்கணக்கில் வெளியாகாமல் இருக்கும் படங்களில் ஒன்றான விழித்திரு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கிய இந்த படத்தில் விதார்த்துடன் கிருஷ்ணா, தம்பிராமைய்யா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் திருடன் வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி யு சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மூன்று முறை தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்ட அப்படம் தற்போது ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறது.