ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி மேனன். அதையடுத்து சந்தனதேவன், நாங்க வேலைக்கு போயிட்டா ஊர பாரு பாத்துக்கிறது ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தினமலர் இணைய தளத்திற்காக அவரை கேட்ட கண்டபோது, அவர் அளித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது.
எந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம்?
தமிழுக்கு வரும் கேரளா நடிகைகள் அங்கு ஓரிரு படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வருவார்கள். ஆனால் நான் மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. அறிமுகமானதே தமிழில்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து விட்டு ஒரு வருடம் மலையாள டிவி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றினேன். பின்னர் ஒரு வருடம் ஐடியில் ஒர்க் பண்ணினேன். அதன்பிறகுதான் பட்டதாரி படத்தில் கமிட்டானேன். மேலும் எனக்கு கும்கி, மைனா போன்று வில்லேஜ் ஸ்கிரிப்டுதான் ரொம்ப பிடிக்கும். நான் கேரளாவில் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்தான். பின்னர் கொச்சினில் படித்தேன். இஞ்சினியரிங் கோயமுத்தூரில் முடித்தேன். 4 வருடம் கோவையில் இருந்ததால் தமிழ் நன்றாக பேசுவேன். எனக்கு தமிழ் தெரிந்தததினால் மட்டும்தான் பட்டதாரி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தனர். இப்போது அமீர் சார் படத்தில்கூட எனக்கு தமிழ் தெரியும் என்பதால்தான் புக் பண்ணியுள்ளனர்.
பட்டதாரியில் ஸ்கோப் இல்லாத வேடத்தில் நடித்ததேன்?
பட்டதாரி ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மதுரை கதையில் வந்த பல படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் நம்பிக்கையுடன் அந்த படத்தில் நடித்தேன். படம் ஓகேதான் என்றபோதும், நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு பர்பாமென்ஸ் பண்ண ஸ்கோப் கிடைக்கவில்லை. 45 நாட்கள் அந்த படத்தில் நடித்தேன். எனக்கு நிறைய காட்சிகள் இருந்தது. ஆனால் பின்னர் என்ன காரணமோ கட் பண்ணி விட்டார்கள். இருப்பினும் நானும், அபி சரவணனும் நடித்த ஒரு பாடல் காட்சி சிறப்பாக இருந்ததாக சொல்லி இப்போது நாங்க வேலைக்கு போயிட்டா ஊர யாரு பாத்துக்கிறது -என்ற படத்தில் மீண்டும் எங்களை ஜோடி சேர்த்துள் ளனர். அய்யனார் படத்தை இயக்கிய ராஜமித்ரன் இந்த படத்தை இயக்குகிறார். ஐடி காதல், ஈகோ சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருவாகிறது.
சந்தன தேவன் படத்தில் எந்த மாதிரி ஹீரோயினாக நடிக்கிறீர்கள்?
ஆர்யா மெயின் லீடாக நடிக்கும் அந்த படத்தில் நடிக்க அக்ரிமெண்ட்டாகி விட்டது. பருத்தி வீரனை இயக்கிய அமீர் படம் என்பதால் அதை நான் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். இந்த படத்திற்காக 6 மாதம் கால்சீட் கொடுத்துள்ளேன். இன்னும் நான் கதையே கேட்கவில்லை. ஸ்பாட்டுக்கு சென்று டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடிக்கப்போகிறேன். இந்த படம் உனக்கு பெயர் சொல்ற மாதிரி இருக்கும் என்று அமீர் சார் சொன்னதால் அதிக நம்பிக்கை யுடன் சந்தன தேவனில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன்.மேலும் அந்த படம் மதுரை கதையில் உருவாக இருப்பதால் மதுரை நேட்டிவிட்டி கதையில் வெளியான சில படங்களை பார்க்குமாறு என்னிடம் கூறியுள்ளார் அமீர் சார். அப்படி அவர் சொன்ன பாரதிராஜாவின் கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை போன்ற மதுரை மண்சார்ந்த கதைகளை பார்த்து வருகிறேன். பரதேசியில் வேதிகா நடித்தது போன்ற வேடம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். அந்த வகையில், எனது கேரக்டர், டிரஸ்ஸிங் இவ்வளவுதான் எனக்கு தெரியும். மேலும், எனது கெட்டப்பை மட்டும் மாற்றக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
எந்த மாதிரி ஹீரோயினாக புகழ் பெற ஆசை?
இந்த மாதிரி நடிகையாக வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நான் பீல்டிற்குள் வந்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு குறும் படத்தில் மட்டும் நடித்திருந்தேன். ஆனால் சினிமாவிற்குள் வந்த பிறகு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நல்ல கதைகளாக கேட்டு செலக்டீவாக நடிக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரி பண்ணும்போது முதல் படம் என்பதால் எந்த சினிமா அனுபவமும் எனக்கு கிடையாது. ஸ்கிப்ட்டை ஜட்ஜ் பண்ண தெரியாது. ஆனால் இப்போது இனிமேல் எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரிந்து விட்டது. அந்த வகையில் பெரிய ஹீரோ என்பதை விட கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன்.
கிளாமரில் கட்டுப்பாடு உள்ளதா?
நான் வெஸ்டர்ன் டிரஸ்தான் அணிவேன். அதனால் சினிமாவில் வல்கர் இல்லாத வகையில் உடையணிந்து நடிப்பேன். நஸ்ரியா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது லிமிட்டேசனை தாண்டவில்லை. அதனால் எனக்கு எது லிமிட்டேசன் என்பதை தெரிந்து அதற்கேற்ப நடிப்பேன். முக்கியமாக நஸ்ரியா துறுதுறு வென்று ஆக்டீவாக நடிப்பார். அவர் சேனல் ஆங்கரும்கூட. அவரைத்தான் நான் பின்பற்றுகிறேன். நிறைய ஹார்டு ஒர்க் பண்ணப்போகிறேன். சினிமாவில் ஜெயிப்பது சாதாரண விசயமல்ல.
ரோல் மாடல்?
நயன்தாரா ரொம்ப பிடிக்கும். நான் பள்ளி படிக்கும்போது இருந்தே அவரை பார்க்கிறேன். இப்போதுவரை வளர்ந்து கொண்டேயிருக்கிறார். அவர் இன்னும் எத்தனை வருசமானாலும் நடித்துக்கொண்டேயிருப்பார். அவரும் சூழ்நிலைக் கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே வருகிறார். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் ஒரு ஹீரோயினிக்காக ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள் என்றால் அது நயன்தாராவுக்கு மட்டுமே. கேரளாவில் நஸ்ரியாவுக்கு எழுதுவார்கள். அப்படியொரு நிலை எனது பெயரளவிலும் வரவேண்டும் என்று ஆசப்படுகிறேன். அதனால் குறைவான படங்கள் என்றாலும் அந்த மாதிரி கதைகள், கதாபத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கப்போகிறேன்.
ஆர்யாவுடன் எந்த நடிகை நடித்தாலும் வதந்தியில் சிக்கிக்கொள்வார்களே?
அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எப்பவுமே நாலு பேரு நாலு விதமாகத்தான் பேசுவார்கள். அதைப்பற்றி யோசித்தால் நாம் வளரவே முடியாது. சில வதந்திகள் நம்மை பெரிய அளவில் வளர்த்து விடும். நமக்கு பின்னாடி யார் என்ன பேசினாலும் அதை கேட்கவே கூடாது. மற்றவர்கள் பேசுவார்களோ என்று கவலைப்பட்டால் நெகடீவாகத்தான் போகும். பாசிட்டிவாக மாறாது. அதனால் யார் என்ன பேசினாலும் அதை காதுகளில் வாங்கிக்கொள்ளாமல், என் வேலையை சரியாக செய்து கொண்டேயிருப்பேன்.
பிடித்த தமிழ் ஹீரோக்கள்?
நான் தல அஜித்தின் ரசிகை. எந்த விசயமாக இருந்தாலும் அவர் ஓப்பனாக பேசுவது எனக்கு பிடிக்கும். அவர் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தாலும் சந்தோசப்படுவேன். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவருடன் டூயட் பாடு வேன். அமீர் சார் படம் கிடைத்ததே நல்ல தொடக்கம்தான். அதனால் எதிர்காலத்தில் அஜித்துடன் டூயட் பாடுவது நடக்கும். மேலும், ஆர்யாவும் ரொம்ப பிடிக் கும். ஆனால் இதுவரை அவரை மீட் பண்ணவில்லை. அவர் நடித்த மதராசப் பட்டினம் படத்தை விரும்பிப் பார்த்தேன். கெட்டப்பை மாற்றி நடித்திருந்தார்.
முத்தக்காட்சியில் நடிப்பீர்களா?
லவ் சீன் என்றால் தேவையான அளவு நடிக்கலாம். தேவையே இல்லாதபட்சத்தில் நடிக்க மாட்டேன். பட்டதாரியில்கூட நல்ல கெமிஸ்ட்ரி சாங்தான். அதனால் அவசியப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பேன். அதிகமான கண்டிசன் போட மாட்டேன். ஆனால் லிப்லாக் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர்கள் சொல்லும்போது அதுபற்றி யோசித்து முடிவெடுப்பேன்.
அதிதி என்ற பெயரில் சில நடிகைகள் பீல்டில் இருக்கிறார்களே?
இந்த விசயம் எனக்கு முதலில் தெரியாது. அதிதி என்ற பெயரில் சில நடிகைகள் இருக்கிற விசயம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. இப்படி ஒரே பெயரில் பல நடிகைகள் இருந்தால் தேவையில்லாத குழப்பங்கள் வரும். அதனால் இப்போது நடித்து வரும் படங்களில் இருந்து எனது பெயரை அதிதி மேனன் என்று மாற்றியுள்ளேன்.
காதல் அனுபவம்?
நல்ல விசயம். எல்லோருக்குமே மனசுக்குள் லவ் இருக்கும். லவ்வே தெரியாது என்று சொன்னால் நான் எப்படி அதை நடிப்பில் பிரதிபலிக்க முடியும். கண்டிப்பாக லவ் மேரேஜ்தான் பண்ணுவேன். முகம் தெரியாத நபரை திருமணம் செய்ய மாட்டேன். எனக்கு முழுசாக தெரிந்த ஒரு நபரையே காதலித்து கல்யாணம் செய்வேன். லைப்பில் எல்லா விசயங்களையும் ஓப்பனாக பேசுவது ரொம்ப நல்லது என்கிறார் அதிதி மேனன்.