ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அறிவிப்பால் சினிமா தொழில் முடங்கி கிடக்கிறது. தியேட்டரில் வசூல் குறைந்து விட்டது, இதைப் பற்றி பேச சினிமாகார்களுக்கு தைரியம் இல்லை.
அதனால் நான் சொல்கிறேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பெட்ரோல் பங்கில், மெடிக்கல் ஸ்டோரில், அரசு அலுவகத்தில் செல்லும் என்பதை போல தியேட்டடர்களிலும் பழைய நோட்டுகளை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தால்தான் சினிமா காப்பாற்றப்படும். பணத் தட்டுபாடால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். இதனை சினிமா சங்கங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னிடம் கருப்பு பணமும் இல்லை. கணக்கை பக்காவாக வைத்திருக்கிறேன். என்றார் மன்சூரலிகான்.