ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக ஒருமாத காலமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை பலரும் உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினி, நாசர் உள்ளிட்ட பல கலைஞர்கள் முதல்வரின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ஷீலா, சின்னத்திரை நடிகர் சங்கம் நிர்வாகிகள் பலரும் மருத்துவமனை சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து... முதல்வர் என்ற முறையிலும், நான் சார்ந்த கலை துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தேன். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் ஜெயலலிதா, தற்போது உடல்நலப் போராட்டத்தில் இருக்குகிறார். தன் மனோபலத்தாலும், மருத்துவத்தாலும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றார்.
இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் பிரார்த்தனை வீண் போகாது நிச்சயம் வெற்றி பெறும், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று மீண்டும் சிறப்பாக வந்து ஆட்சி நடத்துவார் என்று கூறினார்.