சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அஜய் ஞானமுத்து, டிமாண்டி காலனி படத்தை இயக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். அடுத்து அவர் இயக்கும் படம் இமைக்கா நொடிகள். இதுவும் டிமாண்டி காலனி போன்று ஹாரர் காமெடி படம். இதில் நயன்தாராதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். ஆனாலும் அதர்வாவும், ராஷி கண்ணாவும் இன்னோரு ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கிறார்.
படத்திற்காக தரமணி எம்.ஜி.ஆர் திரைப்பட நகரத்தில் பிரமாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த அரங்கத்திலேயே நேற்று படத்தின் பூஜையும், படப்பிடிப்பு துவக்கமும் நடந்தது.
"படப்பிடிப்பிற்கு முன் இருந்தே எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த எதிர்பார்ப்பை அனைத்து விதத்திலும் எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது" என்கிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.
"டிமாண்டி காலனிக்கு முன்பே நான் எழுதிய கதைதான் இமைக்கா நொடிகள். ஆனால் இதற்கு நயன்தாரா மாதிரி பவர்புல் ஹீரோயின் தேவை. முதல் படத்திற்கு நயன்தாராவை தர எந்த தயாரிப்பாளரும் முன்வரமாட்டார்கள் என்பதால் தான் டிமாண்டி காலனி இயக்கினேன். அதில் என்னை நிரூபித்துவிட்டதால் இமைக்கா நொடிகள் படத்திற்கு நயன்தாரா கிடைத்தார். நிச்சயம் இது வேறொரு நயன்தாராவை காட்டும் படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் அஜய்ஞானமுத்து.