14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மதயானைக்கூட்டம், கிருமி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் கதிர். அதையடுத்து என்னோடு விளையாடு, சிகை போன்ற படங்களில் நடித்து முடித்திருப்பவர், தற்போது சத்ரு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி கதிர் கூறுகையில், நான் நடித்து வெளியான இரண்டு படங்களுமே பேசப்பட்டன. அந்த வரிசையில், தற்போது நான் நடித்துள்ள என்னோடு விளையாடு, சிகை போன்ற படங்களும் வித்தியாசமான கதைகளில் உருவாகியுள்ளன. இதில் என்னோடு விளையாடு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்திருக்கிறேன். சிகை படத்தில் ஷோலோ ஹீரோவாக நடித்துள்ளேன். ஒரு நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள அந்த படத்திற்காக பெண் வேடத்திலும் நடித்துள்ளேன். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அப்படம் திரையிடப்பட்டது. பல படங்கள் மோதிய நிலையில், அந்த விழாவில் திரையிட என் படம் தகுதி பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
அடுத்தபடியாக சத்ரு என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக இருக்கும். கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் பாணியில் வடசென்னையில் நடக்கும் ஆக்சன் திரில்லர் படம். இந்த கதையில் அதிக இன்வால்வாகி நடிக்கிறேன். இதில் எனக்கு ஜோடியாக சிருஷ்டி டான்கே நடிக்க, வில்லனாக ராட்டினம் லகுபரன் நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர், ஆக்சன், செண்டிமென்ட் என அழுத்தமான படம். இந்த படத்திற்கு பிறகு நானும் கவனிக்கப் படும் நடிகராகி விடுவேன் என்று கூறும் கதிர், இந்த படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.