ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் வெற்றிகரமான இயக்குனராக இருந்து, பிறகு காமெடி நடிகராக மாறியவர் மனோ பாலா. அவருக்கு தயாரிப்பாளராகும் ஆசை வந்ததால், சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்தார். சதுரங்க வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.அந்த படத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான பாம்பு சட்டை படத்தை ஆரம்பித்தார். பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாம்பு சட்டை படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக நடைபெற்று வந்தன.இந்தப் படத்தை மனோபாலா தயாரித்தது முதல் பிரதி அடிப்படையில்தான். பாம்பு சட்டை படத்துக்கு பைனான்ஸ் செய்து தயாரித்தது நடிகை ராதிகா. நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் மனோபாலா விஷால் அணியை ஆதரித்ததால் கடுப்பான ராதிகா பாம்பு சட்டை படத்தை ட்ராப் பண்ணினார். அதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப் பட்டது. பிறகு நடைபெற்ற பஞ்சாயத்தில் பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாம்பு சட்டை படத்தின் உரிமையை சினிமா சிட்டி கே கங்காதரன் என்ற விநியோகஸ்தர் வாங்கியுள்ளார்.
அதையடுத்து பாம்பு சாட்டை படத்தை விரைந்து முடித்து வெளியிடும் எண்ணத்தில், மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் பாம்பு சட்டை படத்துக்கு தற்போது கால்ஷீட் வேண்டும் என்றால் தங்களுக்கு இன்றைய மார்க்கெட்டின்படி புதிய சம்பளம் வேண்டும் என்று பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் இருவரும் கேட்கிறார்களாம். இதனால் மீண்டும் பாம்பு சட்டை படம் கிடப்புக்குபோக இருக்கிறது.